இலங்கை கொழும்பு துறைமுகத்தின் அருகில் உள்ள கடற்பரப்பில் எம் வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற இரசாயன கப்பல் தீ பற்றி எரிந்ததாக இலங்கை கடற்படை  ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் இருந்து இலங்கை வந்த குறித்த கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

தீயை அணைக்கும் தீவிர பணியில் கடற்படை துறைமுக அதிகார சபை ஈடுபட்டுள்ளது.

மேலும் கடற்படையின் இரண்டு கப்பல்களும் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.