கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் ஓட்டமாவடி - மஜ்மா நகர்ப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.

குறித்த இடத்தில் நேற்று (20) மாத்திரம் 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம். நௌபர் தெரிவித்தார்.

அந்த வகையில், கடந்த திங்கள் முதல் வியாழன் வரையான 4 நாட்களில் 46 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதில் முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, சிங்கள ஆகிய இனங்களைச் சேர்ந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

நேற்று வரை நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்களுடன் மொத்த நல்லடக்கம் 202 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.