இம்முறை வரவு – செலவு திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி  இலங்கை அதிபர்கள் சங்கம் பாராளுமன்ற வளாகத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினை இம்முறை வரவு – செலவு திட்டத்தில் சரிசெய்யப்படும் என்று அரசாங்கம் முன்பு கூறியதாகத் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் பியசிரி பெர்னாண்டோ சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.