மன்னார் மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்றும் நோக்குடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வழிகாட்டலில் 'குணரத்தினம் அறக்கட்டளையின்' அனுசரணையுடன் மாவட்ட ரீதியில் 3 அயிரம் நிழல்தரு மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு கடந்த 6 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், பொது இடங்கள் உள்ளடங்களாக பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு வருகின்றது.

 

இந்த நிலையில் நேற்றையதினம் (30) மடு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மடு வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

குறித்த திட்டத்தின் ஊடாக இது வரை 2500 நிழல்தடு மரக் கன்றுகள் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.