இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மக்களை ஒவ்வொரு நாளும் திசைதிருப்பப் போட்டிகள் நடத்தப்படுகிறதா? என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கில்கிறி்ஸட் விமர்சித்திருந்தார். அவர் விமர்சித்து ஒரு நாள்கூட முடியாத நிலையில், டெல்லி கேப்பிட்லஸ் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின், பெங்களூரு அணியின் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இப்படி முக்கிய வீரர்கள் தொடர்ந்து விலகி வருவதால், ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.