வவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் எயிட்ஸ் அதிகரிப்பதால் இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்புச் சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.


இன்று (30.11.2020) வவுனியா வைத்தியாசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

 

உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை அனுஷ்டிக்கிறோம்.

 

இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைவரை சுமார் 4,000 எய்ட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 2003 இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள். 11 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் ஆறு ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குகிறார்கள்.

 

வவுனியா மாவட்டத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளது. அதாவது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளனர்.அதுவே இளைஞர் மத்தியில் இந்த நோய் பரவ அதிக காரணமாக உள்ளது. ஆகவே இளைஞர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்

 

வவுனியாவில் இருக்கக்கூடி 36 பெண் பாலியல் தொழிலாளிகள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றாலும் அவர்கள் தொடர்ச்சியாக வருகை தருவதில்லை. எனினும் அவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம்.