வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியொருவர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
வத்தளை ஹேமாஸ் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த யுவதி, கடந்த 21ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இருதய நோய்யுடன், கொவிட் நியூமோனியா ஏற்பட்டமையே, இந்த உயிரிழப்புக்கான காரணம் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உயிரிழப்புடன், மேலும் மூன்று உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக 638 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.