நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள போதிலும் , பாடசாலைகளை மூடுவதற்கு எதிர்பார்க்கவில்லை.

கொவிட் சவாலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்கவே எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

கொவிட் அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா என்று கேட்ட போதே பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்தார்.