நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், வார இறுதி நாட்களில் நாட்டினை முடக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ,புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வார இறுதி நாட்களான நாளை(சனிக்கிழமை) முதல் திங்கட்கிழமை வரையாக தொடர்ச்சியாக மூன்று விடுமுறை நாட்கள் வரவுள்ளன.

இந்தநிலையில் இது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.