யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி இன்று (23) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டதை அடுத்து, அன்றைய தினம் இரவு முதல் பாரிய போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில்,  முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை மீள நிர்மாணிக்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. தற்போது புதிதாக மீள நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.