கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் காணப்படும் இடவசதியை விட அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வைத்தியசாலையில் 120 நோயாளர்களுக்கு இடவசதி காணப்படும் நிலையில் தற்போதைய நிலையில் 138 பேர் அங்கு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 08 படுக்கைகளும் நிரம்பியுள்ளன என்றும்,வைத்தியசாலையில் சுமார் 20 சதவீத நோயாளிகளுக்கு பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், பிராணவாயுவின் தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.