மஹர சிறைச்சாலைக்கு முன்பாக மக்கள் கூடியுள்ளதுடன், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

 

இங்குள்ள சுமார் 100 கைதிகளுக்கும் மேற்பட்டவர்களின் உறவினர்களே சிறைச்சாலைக்கு முன்பாக கூடியிருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதிகள் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.

 

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது என்றும் காயமடைந்த இன்னும் சில கைதிகள், கொழும்பு வடக்கு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என அறியமுடிகின்றது.