மீண்டும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, ஐபிஎல் தொடரில் அடுத்த சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த 10 ஆம் தேதி நடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் டி20 தொடரில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்துவீசாமல் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதால்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் இந்த விதியை மீறினால் அணியின் கேப்டன் அடுத்த 2 முதல் நான்கு போட்டிகளுக்கு விளையாட முடியாது. இதனால் ராஜஸ்தானுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்றைய ஆட்டம் அதிகம் கவனிக்கப்படும்.