மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களை அடுத்து, ராகம வைத்தியசாலையில் ஆறு சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மேலும் 58 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் அடங்குகின்றனர்.

 

இந்நிலையில், 12 மணிநேரம் கழித்தும் அங்கு தற்போதும் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக அங்கியிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.