இந்தியாவில் உயிரிழந்த ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அங்கொட லொக்காவினால் பல்வேறு குற்றச் செயல்களுக்கு ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

'சீட்டி' என அழைக்கப்படும் 47 வயதுடைய சரத் குமார என்பவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முல்லேரியாவில் வைத்து இன்று(09) காலை  கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 12ஆம் திகதி வெலிகமவில் 112 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 9ஆவது சந்தேக நபர் இவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

சந்தேக நபர் முல்லேரியாவில் உள்ள தனது வீட்டில் பதுங்கு குழியொன்றில் மறைந்திருந்த நிலையிலே கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.