ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அதன்படி ,சட்ட ஆலோசனைகளை கருத்திற்கொண்டு, ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ,நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, உயர்நீதிமன்றத்தினால் 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.