நடிகர் அருண் விஜய், இப்போது பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக, ஏமாலி, ஜடா படங்களில் நடித்த ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.

மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 15ம் திகதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கெத்து’ படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்கும் படத்தில் அருண் விஜய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் ஜெயம்ரவி நடிக்க இருந்த கேரக்டரில் அருண் விஜய் நடிப்பதாகத் தகவல் வெளியானது. இதை அவர் தரப்பு மறுத்துள்ளது.