இலங்கை

நாட்டில் பார்வை குறைபாட்டால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பெரும்பாலான குழந்தைகள் மூக்குக் கண்ணாடி அணிவதை வழக்கமாக வைத்துள்ளதோடு, தற்போது லென்ஸ் பயன்பாடும் அதிகரித்து வருகின்றது.

குழந்தைகளின் பார்வை குறைபாடு தொடர்பில் வைத்திய நிபுணர்கள் மேலும் விளக்கமளிக்கையில்,

அதிக நேரம் வீட்டுக்குள்ளேயே செலவிடுவதும், தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி இருப்பதும் இன்று அதிகமான குழந்தைகள் கிட்டப்பார்வை கொண்டவர்களாக இருக்க முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருவரின் கண் பார்வை மிக நீளமாக இருக்கும்போது அல்லது கார்னியா மிகவும் வளைந்திருக்கும் போது கிட்டப்பார்வை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான பார்வை குறைப்பாடுகள் ஏற்படும் பொழுது கண்ணாடியை வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எவ்வாறாயினும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பார்வை கோளாறுகள் அனைத்து விடயங்களிலும் சவாலாக மாறும் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.