நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததால் தனக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதன்படி ,மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், ஊழல் செய்தவர்கள் உள்ளே போனாலும் சிறையில் இருந்து ஷாப்பிங் போகிற அளவிற்கு நமது சட்டத்தில் ஓட்டைகள் உள்ளதாக குறிப்பிட்டார்.