இலங்கை

இலங்கையில் சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் சுகாதார ஊழியர்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ரணசிங்க  தெரிவித்துள்ளார்.

மேலும், போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், அவர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஹேமந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.