பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஐம்பது நாட்களை கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது. இந்த ஸ்வாரஸ்யத்திற்கும், விறுவிறுப்பிற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் என்றால் அவர் பிரதீப் ஆண்டனி தான். அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் பலர் உச்சகட்ட கோபத்திற்கு ஆளாகினார்கள்.

பிக் பாஸ் மற்றும் கமல் மீதே பலர் விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும் பிரதீப் ஆண்டனியின் வெளியேற்றத்திற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படும் மாயா மற்றும் பூர்ணிமா மீது ரசிகர்கள் உச்சகட்ட கோபத்தில் இருந்தனர். இருப்பினும் மாயா நாமினேஷனில் இருந்து தப்பித்த நிலையில் பூர்ணிமா இந்த வாரம் நாமிமேஷனில் சிக்கியுள்ளார்.

இந்த வார நாமினேஷனில் இடம்பெற்ற போட்டியாளர்களின் பூர்ணிமா தான் குறைவான வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கின்றார். அவருக்கு அடுத்தபடியாக அக்ஷயா இருந்து வருகின்றார். இருவரும் தான் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். எனவே இவ்விரு போட்டியாளர்களின் ஒருவர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எலிமினேஷன் நடக்க இருப்பதாக தெரிகின்றது. பூர்ணிமா மற்றும் அக்ஷயா இருவரும் வெளியேற அவர்களுக்கு பதிலாக ஏற்கனவே இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாகர்கள் இருவர் வீட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இந்த சீசனில் அதிரடியாக விளையாடி வந்த விஜய் வர்மா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வர இருப்பதாக தெரிகின்றது. அவரை தொடர்ந்து வினுஷாவும் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இவ்வாறு நடந்தால் ரசிகர்களுக்கு ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகின்றது.

ஆனால் இதெல்லாம் உண்மையா இல்லை வதந்தியா என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும். இருப்பினும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஏதேனும் ஒரு ட்விஸ்ட் நடந்துகொண்டு தான் இருந்து வருகின்றது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் சொல்வது போல் இந்த சீசனில் பல எதிர்பாராத விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே இந்த வாரமும் ரசிகர்களுக்கு ட்விஸ்ட் காத்திருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.