பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக சென்றுகொண்டு இருக்கின்றது. 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது. மேலும் இந்த சீசனில் ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர். அதிலும் குறிப்பாக தினேஷ் மற்றும் அர்ச்சனா வந்த பிறகு இந்த நிகழ்ச்சி மேலும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டு இருக்கின்றது.

இதையடுத்து இந்த சீசனில் இதுவரை நடக்காத ஒரு விஷயம் நடைபெற்றது. இந்த சீசனில் கண்டிப்பாக இறுதி போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு அவரை வெளியேற்றினர். அதற்கு மிக முக்கியமான காரணமாக மாயா மற்றும் பூர்ணிமா தான் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இவர்கள் இருவர் தான் மற்ற போட்டியாளர்களை தன் பக்கம் இழுத்து பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வாங்க காரணமாக இருந்தனர் என ரசிகர்கள் தொடர்ந்து இவர்களை விமர்சித்து வருகின்றனர். அதில் இருந்து மாயா மற்றும் பூர்ணிமா மீது ரசிகர்கள் கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கமல் பூர்ணிமாவை வெளுத்து வாங்கிவிட்டார்.

பூர்ணிமா அர்ச்சனா மற்றும் விசித்ராவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அர்ச்சனா தன்னை கேலி கிண்டல் செய்கின்றனர் என மாயா மற்றும் பூர்ணிமா மீது குற்றம்சாட்டினார். அதற்கு கமல் மாயா மற்றும் பூர்ணிமாவை கண்டித்தார். இதையடுத்து அர்ச்சனாவும் தான் தன்னை கேலி கிண்டல் செய்கின்றார், நாங்க செஞ்சது தவறு என்றால் அவர்கள் செய்ததும் தவறு தான். அதையும் கேளுங்கள் என பூர்ணிமா கமலிடம் கூறினார். ஆனால் கமல் அதை கேட்கவில்லை.

இந்நிலையில் நேற்று பூர்ணிமா விக்ரமிடம் இதைப்பற்றி பேசினார். அப்போது கமலையே பூர்ணிமா கடுமையாக விமர்சித்தார். நான் அர்ச்சனா மீது குற்றம்சாட்டினேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை.

அவர்களும் தான் கேலி கிண்டல் செய்தனர். நீங்க ஒரு டீச்சர், இருவரையும் சமமாக நடத்த வேண்டும். நான் இப்போ முகத்திற்கு நேராகவே சொல்லப்போறேன். இதனால் நான் வெளியே சென்றாலும் பரவாயில்லை என்றார் பூர்ணிமா. கமலையே இவ்வாறு பூர்ணிமா கடுமையாக விமர்சித்ததை பார்த்து ரசிகர்கள் ஷாக்கில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது