ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா 2004ம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யாவும் தனுஷூம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

சில நாட்கள் மனவேதனையில் இருந்த ஐஸ்வர்யா, அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் படத்தை இயக்கி உள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்த் தாயார் லதா மற்றும் மகன்களுடன் நேற்று தீபாவளியை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், தந்தை தனுஷ் இல்லாமல் அவரது மகன்கள் தாத்தாவுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி உள்ளனர். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.