விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தனது 7வது சீசனின் 30வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் 5 பேர் வெளியேறியுள்ளனர்.

மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் நிகழ்ச்சியில் நுழைந்துள்ளனர். இதனிடையே தற்போது வைல்ட் கார்ட் மூலம் புதிய போட்டியாளர்கள் நுழைந்துள்ள நிலையில் நிகழ்ச்சி மேலும் களைகட்டி வருகிறது.

பிக்பாஸ், ஸ்மால்பாஸ் என இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்சசியின் துவக்கம் முதலே இருந்து வருகிறது. இது தற்போது புதிய போட்டியாளர்களுடன் மேலும் வீரியமடைந்துள்ளது. இதையடுத்து அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன. இன்று காலையில் வெளியான ப்ரமோவில் நடத்தப்பட்ட புதிய டாஸ்க்கில் கூல் சுரேஷ் பிரதீப்பை கலாய்க்க அவர்களுக்குள் சண்டை மூண்டது.

இதையடுத்து தான் பிக்பாஸ் வீட்டை விட்டு போவதாக கூல் சுரேஷ் உடைமைகளுடன் வெளியேறியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இவர்களின் சண்டை தொடர்ந்ததை இரண்டாவது ப்ரமோவில் பார்க்க முடிந்தது. கூல் சுரேஷை சில்லறை பய என்று பிரதீப் வம்பிழுக்க, அவர் என்ன சில்லறை பையனா என்று விஷ்ணு சப்போர்ட் செய்தார்.

மேலும் கூல் சுரேஷை வாடா போடா என்றெல்லாம் பிரதீப் கூற சண்டை முற்றியது. மோசமான வார்த்தைகளால் இருவரும் மாற்றி மாற்றி திட்டிக் கொள்ள அடிதடிக்கு வித்திட்டது. இருவரையும் சமாதானப்படுத்த மற்ற போட்டியாளர்கள் முயன்ற நிலையில், கோபத்தில் கூல் சுரேஷ் பொங்கினார். அசிங்க அசிங்கமாக பேசினாலும் சும்மா இருப்பீர்களா என்று அவர் கேட்பதாக தற்போது வெளியான ப்ரமோவில் காணப்படுகிறது. பிரதீப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண் போட்டியாளர் ஒருவர் அறிவுறுத்த, உன் வேலையை பார்த்துக் கொண்டு போம்மா என்று பிரதீப் கோபத்துடன் கூறுகிறார்.