விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1 ஆம் திகதி முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கி இரண்டுவாரம் ஆனநிலையில், போட்டியாளர்களிடையே கருத்து மோதல்களும் தொடங்கியுள்ளன.

இதில், வனிதாவின் மகள் ஜோவிகா படிப்பு தொடர்பாக தெரிவித்த கருத்து பேசுபொருளாகி உள்ளது. அதில், ஜோவிகாவிடம் நடிகை விசித்ரா தமிழில் எழுதிக் காட்டச் சொல்கிறார். அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் வரவில்லை, அதனால் நான் எழுதமாட்டேன் என்று பேசி அது பெரும் விவாதமானது.

இது குறித்து பேட்டி அளித்துள்ள நடிகை கஸ்தூரி, நான் பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்டேன்,அதற்கு முன்னாடியும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கல, பின்னாடியும் பார்க்கல. ஆனால், இணையத்தில் ஜோவிகா வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு கல்வி தேவையில்லை என்று ஆக்ரோஷமா பேசிய வீடியோவை பார்த்தேன்.

என்னை பொருத்த வரை, படிப்புக்கும், கல்விக்கும்,திறமையையும் நான் சம்மதப்படுத்தி பார்க்கவில்லை. படிப்பு என்பது வேறு, திறமை என்பது வேறு. ஆனால், கல்வி என்பது அடிப்படை தகுதி என்பதை விட, வாழ்க்கைக்கு ஒரு பேக்கப்பாக படிப்பை சொல்லாம். ஜோவிகாவிற்கு பணம் இருக்கிறது, குடும்ப பின்னணி இருக்கு. அவர் ஏற்கனவே ஜெயித்துவிட்டார்கள் என்பதால், ஜோவிகாவிற்கு கல்வி தேவையே இல்லை.

ஆனால், வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கு கல்வி என்பது தேவையான ஒன்று, அழகை நம்பி பொழப்பு தேட முடியாது.ஆனால், படிப்பு குறைந்தபட்ச தகுதி இருந்தால், ஏதோ ஒரு நேரத்தில் வாழ்க்கையோடு போராட அது உதவியாக இருக்கும்.

மேலும்,ஜோவிகா வனிதா விஜயகுமாரின் மகளாக இல்லாமல் இருந்து இருந்தால்,18 வயசு ஆன உடனே, இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்குமா, இவங்களுடைய அம்மா யாரு, இவங்களுக்கும் விஜய் டிவிக்கும் இருக்கும் நட்பை வைத்துத்தான் ஜோவிகாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பே கிடைத்தது என்று நடிகை கஸ்தூரி பேசி உள்ளார்.