இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் எவிக்‌ஷன் இருக்காது என்பதையே விஜய் டிவி வெளிப்படுத்திய நிலையில், வார இறுதியில் சுவாரஸ்யம் இருக்காது என்றும் அந்த ஷோவை புறக்கணித்து விடலாம் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பிரதீப் ஆண்டனி, விசித்ரா உள்ளிட்டோர் ரவீனாவையும் மணியையும் நேரடியாக அட்டாக் செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.

நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் தானே என விசித்ரா நேரடியாக கேட்பதும், காதல் கன்டென்ட் நல்லா கொடுக்கிற ரவீனா என பிரதீப் ஆண்டனி ஏடாகூடமாக பேசியும் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

விசித்ரா நல்லா படித்து விட்டு பிக் பாஸ் வீட்டுக்கு வந்தாலும், இளம் பெண்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையை விடக் கூடாது என்பதை எங்கேயும் படிக்கவில்லை போலத்தான் தெரிகிறது. அனன்யாவின் டாட்டூவை பார்க்க ஆசைப்பட்டு அவரை வீட்டுக்கே பார்சல் செய்து விட்டார். அடுத்து தற்போது ரவீனாவிடம் நீயும் மணியும் லவ்வர்ஸ் தானே என்று நாகரீகமே இல்லாமல் கேட்கிறார். நாங்க அப்படி சொல்லல நல்ல நண்பர்கள் தான் என அவர் சொல்ல, பார்த்தால் அப்படி தெரியலையே என பேசியுள்ளார்.

பிக் பாஸ் சீசனில் இப்படியொரு போட்டியாளரை பார்க்கவே முடியாது என்கிற ரீதியில் நீ நல்லவனா? அல்லது கெட்டவனா? என்கிற ரேஞ்சில் பிரதீப் ஆண்டனி கேம் ஆடி வருகிறார். தற்போது ரவீனா நல்லா காதல் கன்டென்ட் கொடுத்து ஷோவை ஓட்டுறீயேன்னு ஏடாகூடமாக பேசி அதிர வைத்துள்ளார்.

ரவீனாவையும் மணியையும் இப்படி பேசி பேசியே காதலர்களாக மாற்றி விடுவார்களோ என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், காதலித்தால் கூட என்ன தவறு, அது அவர்கள் தனிப்பட்ட விஷயம் அதையெல்லாம் இப்படி கொச்சையாக பிரதீப் ஏன் பேச வேண்டும் என அவரை விளாசி வருகின்றனர்.