விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 6வது நாளில் நுழைந்துள்ளது. தினந்தோறும் பல்வேறு பிரச்சினைகளுடன் தங்களுடைய பொழுதுகளை போட்டியாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

பிரதீப், கேப்டன் விஜய், விசித்ரா, ஜோவிகா போன்றவர்கள், அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இவர்களின் அதிரடியான பேச்சுக்கள் ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்து வருகிறது. குறிப்பாக பிரதீப், விசித்ரா போன்றவர்களின் செயல்பாடுகள் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு மிகவும் சிறப்பாக பங்களித்து வருகிறது.

நேற்றைய தினம் வனிதாவின் மகள் ஜோவிகாவின் படிப்பு குறித்து காரசாரமான விவாதத்தை மேற்கொண்டு, ரசிகர்களிடையே பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்களை வாங்கினார் விசித்ரா. தன்னுடைய படிப்பு குறித்து தன்னுடைய அம்மா சொன்னால் மட்டுமே தான் கேட்டுக் கொள்வேன் என்று விசித்ராவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருந்தார் ஜோவிகா. இவர்களின் இந்த அதிரடி விவாதத்தால் போட்டி களைகட்டியது.

இதனிடையே, இன்று காலையிலேயே அடுத்த அதிரடிக்கு தயாரானார் விசித்ரா. காலையில் லேட்டாக வந்து பிரேக்பாஸ்ட்டிற்கு சைட்டிஷ் எதுவும் இல்லையா என்று கேட்ட கூல் சுரேஷுக்கு சரியாக பதிலடி கொடுத்தார். அனைவரும் சாப்பிடும்போது வராமல், லேட்டாக வந்து தெனாவட்டாக ப்ரேக்பாஸ்ட் கேட்குறீங்க என்று அவர் சரவெடியாக பதிலடி கொடுக்க, என்ன சொல்வது என்று தெரியாமல் கூல் சுரேஷ் முழித்ததை பார்க்க முடிந்தது.

முன்னதாக பிரதீப்பிடமும் தன்னுடைய காட்டத்தை விசித்ரா காட்டியிருந்தார். தொடர்ந்து அவர் கிறுக்குத்தனமாக தன்னிடம் பேசும்பட்சத்தில் கையில் கிடைப்பதை தூக்கி அடித்துவிட்டு ரெட் கார்ட் வாங்கிவிட்டு போய்க்கொண்டே இருப்பேன் என்று அவர் குறிப்பிட்டார். நான் அமைதியாக இருப்பது போலவே ரௌடியிசமும் செய்வேன் என்றும் மிரட்டலாக தெரிவித்தார். இதுபோல தான் அதிகமான பேரை அடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.