இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா (16) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை மீராவின் அறை கதவு வெகுநேரமாக திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்துக் கொண்டு அவருடைய பெற்றோர் உள்ளே சென்றனர்.

அப்போது மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த மீராவை அவருடைய பெற்றோர் மீட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் அதிகாலை 3 மணி அளவில் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து மீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாரா மன அழுத்தம் காரணமாக இறந்திருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது