லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகும் படங்களின் புரமோஷனுக்கு மட்டும் வருகிறார் என்றும் மற்ற திரைப்படங்களின் புரமோஷனுக்கு செல்வதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா அறிமுகமாக உள்ள நிலையில், மும்பையில் இருந்து சென்னைக்கு ஷாருக்கான் வந்து தனது படத்தின் புரமோஷனுக்காக மேடையில் அனிருத்துடன் ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் நிலையில், நடிகை நயன்தாரா பெயருக்கு கூட அதில் கலந்து கொள்ளவில்லையே என்கிற விமர்சனங்கள் கிளம்பின.
  
மேலும், துபாய் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறும் ஜவான் புரமோஷனிலும் பங்கேற்க முடியாத சூழலில் திடீரென இன்ஸ்டாகிராமில் கணக்கை ஆரம்பித்த நயன்தாரா அந்த படத்தின் டிரெய்லரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு புரமோட் செய்திருந்தார்.

இந்நிலையில், இனி வரும் அனைத்து படங்களுக்கும் நயன்தாரா இதே போல இன்ஸ்டாகிராமில் புரமோஷன் செய்வார் என கோலிவுட் பிரபலங்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இன்று வெளியான ஜெயம் ரவியின் இறைவன் டிரெய்லரை நயன்தாரா புரமோட் செய்யவில்லை என்பதை அறிந்த ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

ஜவானுக்கு புரமோஷன் செய்த நயன்தாரா ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் படத்துக்கு ஒரு போஸ்ட் போட்டால் என்ன குறைந்தா போய் விடுவார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், நயன்தாரா ரசிகர்கள் சீக்கிரமாகவே நயன்தாரா இறைவன் ட்ரெய்லரை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார் என காத்திருக்கின்றனர்.