நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர், டான்ஸ் மாஸ்டர், இசையமைப்பாளர் என சினிமாவில் பன்முகம் காட்டி வருகிறார். சமீபத்தில் லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படம் கலவையான விமர்சனங்களைளே பெற்றது. இதனிடையே அடுத்ததாக வரும் 15ம் திகதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படம் ரிலீசாகவுள்ளது.

அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் லாரன்ஸ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் அதிகமான வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த இரு படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ள நிலையில் லாரன்சின் அடுத்தப்படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அடுத்ததாக தான் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் இணையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை சந்தானத்தின் குலுகுலு படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கவுள்ளார். இந்த புதிய படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதத்தில் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ள லோகேஷ் கனகராஜ் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்சிற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.