எரிவாயு கசிவு காரணமாக ஆக்லாந்தின் டவுன்டவுனில் உள்ள பரபரப்பான பகுதி ஒன்றை அவசர சேவைகள் மூடியுள்ளன.

Customs St East மற்றும் Gore தெரு சந்திப்புக்கு அருகிலுள்ள மேன்ஹோலில் இருந்து இநத் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் அவசர செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

FENZ இன்னும் நிலைமையை மதிப்பிடுகிறது மற்றும் விரைவில் மேலதிக தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரை அப்பகுதியில் இருந்து விலகி இருப்பது நல்லது.

இந்நிலையில் ஆக்லாந்து மக்களுக்கு இந்த எரிவாயு கசிவு பற்றி எச்சரிக்கும் வகையில் தொலைபேசிகளுக்கு எச்சரிக்கை செய்தி வந்திருப்பதாக பலர் தெரிவித்தனர்.

அப்பகுதி மக்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள எவரும் அப்பகுதியை காலி செய்து உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலைப் பின்பற்ற வேண்டும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்