நெல்சன் இடைநிலைப் பள்ளிக்கு வெளியே தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் Nayland வீதியில் அமைந்துள்ளது குறித்த பள்ளிக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் 25 மற்றும் 27 வயதுடைய இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர்.

இவர்கள் அடுத்த வாரம் புதன்கிழமை நெல்சன் மாவட்ட நீதிமன்றத்தில் அடுத்த ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்