மத்திய ஆக்லாந்தில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இரண்டு பேர் பொலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு அறிக்கையில், ஆக்லாந்து நகர CIB இன் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஸ்காட் பியர்ட், இன்று மதியம் 1.13 மணிக்கு மேல் குயின் தெருவில் உள்ள ஒரு முகவரிக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாகக் கூறினார்.

பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் அவர் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரண்டு பேர் பொலிஸாரின் விசாரணைகளுக்கு உதவுவதாக பியர்ட் கூறினார்.

மேலதிக தகவல்கள் கிடைக்கும்போது வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்