இலங்கையில், மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் உள்ள பாடசாலைகள் மார்ச் 15 ஆம் திகதி திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டின் முதற்தவணை விடுமுறைக்காக பெப்ரவரி 25 ஆம் திகதி மூடப்பட்டது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 15 திங்கள் அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.