2021ஆம் வருடத்திற்கு மாணவர்களை இடைநிலை வகுப்புக்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

அதன்படி, மாணவர்களை பாடசாலைக்கு சேர்ப்பதற்காக கல்வியமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்தல், முறைப்பாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் ஊடாக அழுத்தம் கொடுத்தல் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறும் கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.