அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்த சசிகலா, தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி அவரது வீட்டின் முன் சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் , அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கப்போவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த ஆதரவாளர்கள் 6 பேர் சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறகு இவர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்தது. அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என்று போலீசார் வலியுறுத்தியும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை