இந்தியா: தமிழ்நாடு

சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து சீமானிடம் பாஜகவின் பி டீமாக செயல்பட்டு திமுகவின் வாக்குகளை பிரிப்பதாக எழும் குற்றச்சாட்டு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் பதிலளிக்கையில்...

நான் வாக்குகளை பிரிக்க வந்த ஆள் இல்லை. நாட்டை பிடிக்க வந்த ஆள். நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது.

இன்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் தான். அதற்காக நான் திமுகவின் பீ டீம் ஆகிவிடுவேனா? அரசியலில் நான் தான் ராஜா. நாங்கள் தான் நம்பர் ஒன் என்று தெரிவித்தார்.