நேப்பியர் நகரின் சில பகுதிகளில் நேற்று மின்சாரம் வந்ததையடுத்து, தெருக்களில் ஆரவாரமும் கைதட்டலும் எழுந்ததாக மேயர் கூறுகிறார்.

சில வீடுகள் பிராந்தியம் முழுவதும் மதிப்பிடப்பட்டு வருகின்றன, மற்றும் சில குடியிருப்பாளர்கள் வீடுகளுக்கு திரும்பி வரத் தொடங்கினர்.

நகரத்தில் சுமார் 30 சதவிகிதம் மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக CBD மற்றும் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில்.

ஆனால் மேயர் கிர்ஸ்டன் வைஸ் மக்கள் மின்சாரத்தை  பயன்படுத்துவதில் கவனமாக  இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் தண்ணீர் உபயோகத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

எல்பிஜி எரிவாயு தேவைப்படுபவர்களுக்கு விநியோகம் நடந்து வருகிறது என்று வைஸ் கூறினார்.

அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பவர்களுக்கு, "பயப்பட வேண்டாம்" என்று கூறியதோடு, காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இன்னும் மின்சாரம் இன்றி பலர் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும் என அவர் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் நிலவரப்படி, நேப்பியர் அனர்த்த மையங்களில் சுமார் 900 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று வைஸ் கூறினார்.