கிழக்கு ஆக்லாந்தில் நேற்றிரவு நடந்த ஒரு மோதல் சம்பவத்தை தொடர்ந்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பறியும் சார்ஜென்ட் ராப் ஹன்கின் இச் சம்பவம் தொடர்பில் கூறுகையில்...

நேற்று இரவு 11.30 மணியளவில் கிழக்கு Tāmaki இல் உள்ள Ti Rakau Drive இல் சண்டை நடந்ததாக தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இந்நிலையில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மேலும் இரண்டு நபர்கள் சிறிய மற்றும் மிதமான காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.

அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த மோதலில் சம்பந்தப்பட்ட மற்றவர்களைக் கண்டறியவ விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.